Home » வழிந்து ஓடும் கழிவுநீர்., அதிரை பேரூராட்சி செவிசாய்க்குமா..?

வழிந்து ஓடும் கழிவுநீர்., அதிரை பேரூராட்சி செவிசாய்க்குமா..?

0 comment

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் தக்வா பள்ளிவாசல் மீன் மார்க்கெட் செல்லும் பிரதான வீதியில் கழிவுநீர் வெளியேறி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அதிரை தக்வா பள்ளிவாசல் மீன் மார்க்கெட் செல்லும் பிரதான சாலை பல வருடங்களாக பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் சாலையே. இந்த முக்கிய சாலையின் ஓரத்தில்(NKS சவுண்ட் சர்வீஸ்) அருகே கழிவுநீர் செல்லும் வாய்க்காலில் குப்பைகள் சிக்கிக்கொண்டு கழிவுநீர் வெளியேற வழியின்று இருந்தது. இந்நிலையில், கழிவுநீர் சாலை முழுவதையும் அபகரித்து அந்த பகுதியை நோய் பரவும் கிடங்காக மாற்றியுள்ளது. கழிவுநீர் சாலைகளில் தேங்கி கிடப்பதால் டெங்கு, மலேரியா காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த பகுதியை நோய் தொற்றிலிருந்து பேரூராட்சி நிர்வாகம் பாதுகாக்குமா என்பது மக்களிடையே ஒரு கேள்வியாகவே எழுந்துள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter