அதிரை பேரூராட்சியின் சார்பில் செக்கடி பள்ளிவாசல் முதல் மரைக்கா குளம் வரை புதிய தார் சாலையமைக்க பூர்வாங்க நடவடிக்கைகளை ஒப்பந்ததாரர் எடுத்து வருகிறார்.
இந்நிலையில் நாளையோ நாளை மறுநாளோ சாலையமைக்கும் பணி தொடங்க உள்ள நிலையில்,தரமிக்க தார் சாலையாக அமைய அப்பகுதி மக்கள் விழிப்புடன் இருந்து ஒப்பந்த அடிப்படையில் சாலை அமைய பெருகிறதா என கண்காணிக்க வேண்டும்.