Friday, April 19, 2024

பட்டுக்கோட்டை-திருவாரூர் ரயில் பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்~மத்திய ரயில்வே அமைச்சரிடம் நேரில் கோரிக்கை மனு !

Share post:

Date:

- Advertisement -

காரைக்குடி – திருவாரூர் இடையேயான ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு கடந்த 5 வருடங்களாக பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் காரைக்குடி-பட்டுக்கோட்டை இடையே பணிகள் முடிக்கப்பட்டு கடந்த ஆண்டு முதல் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள பட்டுக்கோட்டை-திருவாரூர் இடையிலான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் பட்டுக்கோட்டை-திருவாரூர் இடையே நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடித்து மார்ச் 15ம் தேதிக்குள் CRS நடத்திட வேண்டும் என கோரி டெல்லியில் உள்ள நாடாளுமன்ற ரயில்வே பவனில் மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஸ் கோயலைச் சந்தித்து தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் கு. பரசுராமன் தலைமையில் அதிரை தன்னார்வலர்கள் M.S. சகாபுதீன் மற்றும் A. அப்துல் ரஜாக் ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர், மார்ச் மாதம் 30ம் தேதிக்குள் CRS நடைபெற நடவடிக்கை எடுப்படும் என்றும் அதனைத் தொடர்ந்து திருவாரூர்-காரைக்குடி இடையே முழுமையாக ரயில் போக்குவரத்து தொடங்கும் என்றும் உறுதி அளித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...