Home » பட்டுக்கோட்டை-திருவாரூர் ரயில் பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்~மத்திய ரயில்வே அமைச்சரிடம் நேரில் கோரிக்கை மனு !

பட்டுக்கோட்டை-திருவாரூர் ரயில் பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்~மத்திய ரயில்வே அமைச்சரிடம் நேரில் கோரிக்கை மனு !

0 comment

காரைக்குடி – திருவாரூர் இடையேயான ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு கடந்த 5 வருடங்களாக பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் காரைக்குடி-பட்டுக்கோட்டை இடையே பணிகள் முடிக்கப்பட்டு கடந்த ஆண்டு முதல் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள பட்டுக்கோட்டை-திருவாரூர் இடையிலான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் பட்டுக்கோட்டை-திருவாரூர் இடையே நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடித்து மார்ச் 15ம் தேதிக்குள் CRS நடத்திட வேண்டும் என கோரி டெல்லியில் உள்ள நாடாளுமன்ற ரயில்வே பவனில் மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஸ் கோயலைச் சந்தித்து தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் கு. பரசுராமன் தலைமையில் அதிரை தன்னார்வலர்கள் M.S. சகாபுதீன் மற்றும் A. அப்துல் ரஜாக் ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர், மார்ச் மாதம் 30ம் தேதிக்குள் CRS நடைபெற நடவடிக்கை எடுப்படும் என்றும் அதனைத் தொடர்ந்து திருவாரூர்-காரைக்குடி இடையே முழுமையாக ரயில் போக்குவரத்து தொடங்கும் என்றும் உறுதி அளித்துள்ளனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter