தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் ஓம்கார் ஃபவுண்டேஷன் அமைப்பினர் மீனவர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் இன்று (பிப் 18) நடைபெற்றது.
தமிழ்நாடு விசைப்படகு மீனவ நலச்சங்க செயலாளர் AK.தாஜுதீன் தலைமை வகித்தார்.நாட்டுப்படகு சங்க தலைவர் SRK.ராஃபிக் முன்னிலை வகித்தார்.இக்கூட்டத்தில் கடல் சார்ந்த பொருட்கள் ஏற்றுமதி குறித்து,மீன்பிடி பொருட்களின் தரம்,மீனவர்களின் தேவைகள் குறித்தும் கலந்தரையாடல் நடைபெற்றது.இதில் 30க்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்துக்கொண்டனர்.