தஞ்சை தெற்கு மாவட்டம் செந்தலைபட்டினத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் கிளை அறிமுக நிகழ்ச்சி இன்று 24/02/2019 ஞாயிற்றுகிழமை மாலை 4 மணியளவில் செந்தலையில் மாவட்ட பொறுப்பு குழு தலைவர் பேராவூரணி அப்துல் சலாம் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின் செந்தலை ஆசிக் அவர்கள் வரவேற்புரை நிகழ்தினார். மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் அதிரை பைசல் அஹமது, அதிரை நகர து. செயளாலர் ஸ்மார்ட் சாகுல் ஹமீது அவர்கள் முன்னிலை வகிக்க. மஜகவின் கொள்கைகள் குறித்தும் சமூகநீதி செயல்பாடுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. பின்பு கீழ்காணும் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.
கிளை செயளாலராக S.ஆசிக்,கிளை பொருளாளராக முகமது மைதீன், கிளை து.செயளாலர்களாக:S.அசாருதீன்,
J.ஜம்மூர் அலி,J.மஹாதீர் ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இதில் அதிகமான இளைஞர்களும், கல்லூரி மாணவர்களும் தங்களை மனிநேய ஜனநாயக கட்சியில் இணைத்துக் கொண்டனர்.