Friday, April 19, 2024

முக்கிய பிரச்சனைகளின் போது வராமல் இப்போது மட்டும் வருவது ஏன் ? மோடிக்கு எதிராக பொங்கும் தமிழர்கள் !

Share post:

Date:

- Advertisement -

கன்னியாகுமரியில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். அவர் கன்னியாகுமரியில் நடக்க உள்ள அரசு விழாவில் கலந்து கொள்கிறார்.

பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகையை எதிர்த்து எப்போதும் போல தமிழர்கள் பலர் போராடி வருகிறார்கள். இதனால் டிவிட்டரில் #GoBackModi ஹேஷ்டேக் வைரலாகி உள்ளது.

இந்த டேக் தற்போது தேசிய அளவில் வைரலாகி உள்ளது. தேசிய அளவில் டிரெண்டாகி இந்த டேக் முதலிடம் பிடித்து உள்ளது. இதில் நேற்று இரவில் இருந்து தமிழக மக்கள் பிரதமர் மோடிக்கு எதிராக டிவிட் செய்து வருகிறார்கள்.

இதில் மோடிக்கு எதிராக நிறைய கருத்துக்கள் வைக்கப்பட்டு, கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. முக்கியமாக ஓகி புயலின் போது குமரி மாவட்டம் மோசமாக பாதிக்கப்பட்டது. ஆனால் ஒரு பாஜக எம்.பி குமரியில் இருந்து தேர்வு செய்யப்பட்டும் கூட, பிரதமர் மோடி சேதங்களை பார்வையிட வரவில்லை. அதேபோல் குமரி மக்களுக்கு போதுமான நிவாரணமும் வழங்கப்படவில்லை.

அதேபோல் தென் மாவட்டங்களை அதிகம் பாதித்த தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சனையான ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு, வார வாரம் கைது செய்யப்படும் குமரி மீனவர்கள் என முக்கியமான விஷயங்கள் எதையும் பிரதமர் மோடி கண்டுகொள்ளவில்லை. இதுகுறித்து அறிக்கையோ, பேட்டியோ கூட அவர் கொடுக்கவில்லை.

அதேபோல் கஜா புயல், விவசாயிகள் போராட்டம், குரங்கணி தீ விபத்து என்று தமிழகத்தின் வேறு எந்த விதமான பிரச்சனை குறித்தும் அவர் பேசவில்லை. ஆனால் இவ்வளவு நடந்த பின் வராமல் தேர்தல் நேரத்தில் மட்டும் பிரதமர் மோடி தமிழகம் வருவது ஏன் என்று மக்கள் கேள்வி எழுப்பி உள்ளார். தேர்தல் நேரத்தில்தான் தமிழகம் கண்ணுக்கு தெரிகிறதா என்று #GoBackModi ஹேஷ்டேக்கில் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...