Thursday, April 25, 2024

மல்லிப்பட்டிணத்தில் சாலையை ஆக்கிரமித்த குப்பைகள்,வழியை ஏற்படுத்துமா ஊராட்சி நிர்வாகம்…!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டினம் பேருந்து நிலையம் பின்புறம் பெண்கள் பயன்படுத்தக்கூடிய சாலை உள்ளது. அச்சாலை பெண்கள் பயன்படுத்தும் முக்கிய சாலையாகவும் உள்ளது.

இந்நிலையில் அந்த சாலை முழுவதும் குப்பைகள், கழிவுகள், காய்கறி கழிவுகள்,பிளாஸ்டிக் கழிவுகள் போடப்பட்டுள்ளன. சாலை முழுவதும் பரவி கிடக்கும் குப்பைகள் மற்றும் கழிவுகளால் அந்த சாலையே காணாமல் போய்விட்டது.

குப்பென வீசும் துர்நாற்றத்தால் அந்த சாலை வழியே பொதுமக்கள் நடப்பதற்கு மிகவும் சிரமமாக உள்ளது.மேலும் இப்பிரச்சனை பல ஆண்டுகளாக நீடித்து வருவதாக இப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

பள்ளி மாணவிகளும் இச்சாலையையே பயன்படுத்தி வருகின்றனர். எனவே இவ்விஷயத்தில் மல்லிப்பட்டினம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் பல முறை கோரிக்கை விடுத்துள்ளனர்.கோரிக்கையை தொடர்ந்து புறக்கணித்து வரும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்படுமா ? பொறுத்திருந்து பார்ப்போம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...