Home » தமிழகத்தில் ஏப்ரல் 18 ல் தேர்தல் : இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

தமிழகத்தில் ஏப்ரல் 18 ல் தேர்தல் : இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

0 comment

17 வது மக்களவை தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணைய அதிகாரி சுனில் அரோரா இன்று மாலை 5 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து தேர்தல் தேதியை அறிவித்தார்.

அதன் படி 7 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11 ம் தேதியும்,
2 ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18 ம் தேதியும்
3 ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 23 ம் தேதியும்,
4 கட்ட தேர்தல் ஏப்ரல் 29 ம் தேதியும்,
5 ம் கட்ட தேர்தல் மே 06 ம் தேதியும்,
6 ம் கட்ட தேர்தல் மே 12 ம் தேதியும்,
7 ம் கட்ட தேர்தல் மே 19 ம் தேதியும் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் முதல் முறையாக ஒரே கட்டமாக ஏப்ரல் 18 ம் தேதி நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார்.

இந்த தேர்தலில் பூத் சிலிப்களை வைத்து வாக்களிக்க முடியாது என்றும் மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கு வாக்குச் சாவடிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், மே 23 ம் தேதி வாக்கு தேர்தல் முடிவுகள் வெளியாகும் எனவும் அறிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter