அதிராம்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை புரட்டி போட்ட கஜா புயலால் தென்னை உள்ளிட்ட விவசாயங்கள் முற்றிலும் நலிந்து போயுள்ளன.
இதனை அடுத்து ஆய்வை மேற்கொண்ட அரசு, ஏக்கருக்கு 175 தென்னை மரங்கள் மட்டுமே உள்ளவர்களுக்கு கணக்கெடுப்பு நடத்தி கிராம நிர்வாக அலுவலர் மூலம் இழப்பீடு வழங்கி வருகின்றது.
ஆனால் உண்மையில் பாதிக்கபட்ட விவசாயிகள் முன்னரே பதிவுகள் செய்திருந்தும் இதுநாள் வரை இழப்பீட்டு தொகை கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளன.
மேலும் அரசு குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் முன்னுரிமை அளித்து அதிகாரிகள் செயல்படுவதாகவும், இதனை அரசுதடுக்க வேண்டும் எனவும், தேர்தலுக்கு முன்னரே இழப்பீட்டு தொகை ஒதுக்கீடு செய்துவிட்டதால் காலதாமதம் இன்றி உடனடியாக இழப்பீடு வழங்கிட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.