Home » அதிரை: ஓட்டுனர் உரிமம் வழங்காமல் இழுத்தடிக்கும் ஓட்டுனர் பயிற்சி நிறுவனம் ?

அதிரை: ஓட்டுனர் உரிமம் வழங்காமல் இழுத்தடிக்கும் ஓட்டுனர் பயிற்சி நிறுவனம் ?

0 comment

அதிராம்பட்டினம் நகரில் இயங்கி வரும் தனியார் ஓட்டுனர் பயிற்சி நிறுவனத்தில், ஏராளமான இளைஞர்கள் கார், வேன் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் ஒட்டுனர் பயிற்சிக்கு சேர்ந்து பயின்று வருகின்றனர்.

இவர்களுக்கு பயிற்சிக்காலம் முடிந்து நன்றாக பயிற்சி முடிந்த இளைஞர்களுக்கு ஒட்டுனர் உரிமம் வழங்கிட முன்னதாகவே பணத்தை பெற்றுகொள்வதாக கூறப்படுகிறது.

ஆனால் நன்கு பயிற்சி முடித்த நபர்களுக்கு முறையாக ஓட்டுனர் உரிமம் பெற்றுத்தருவதில் கால தாமதம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து குறிப்பிட்ட நிர்வாகத்திடம் கேட்டால் பொறுப்பற்ற பதிலை கூறுவதாக அந்நிறுவனத்தில் பயின்ற நபர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனால் வேலை கிடைத்தும் ஒட்டுனர் உரிமம் இல்லாததால் வேலையிழக்கும் சூழல் உருவாகுகிறது.

எனவே இந்த குளறுபடி எதனால் , யாரால் ? நிகழ்வது என்பதை நிர்வாகம் ஆராய்ந்து மேற்கண்ட பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter