தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர் S.S.பழனிமாணிக்கம் அவர்களை மாநில வர்த்தக அணி செயளாலர் யூசுப் ராஜா அவர்கள் தலைமையில் இன்று (27/03/2019) புதன்கிழமை காலை 8 மணிக்கு சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் கொள்கை விளக்க அணி பேச்சாளர் அப்துல் காதர், தஞ்சை மாநகர் மாவட்ட செயளாலர் வல்லம் அஹமது கபீர், தஞ்சை தெற்கு மாவட்ட செயளாலர் பேராவூரணி அப்துல் சலாம், தெற்கு மாவட்ட து.செயளாலர் சாகுல் ஹமீது, தஞ்சை நகர செயளாலர் அப்துல்லா, அதிரை நகர செயளாலர் அப்துல் சமது ஆகியோருடன் மனிதநேய சொந்தங்கள் திரளாக கலந்து கொண்டனர்.