தஞ்சை நாடாளுமன்ற திமுக வேட்பாளர் SS.பழனி மாணிக்கம் இன்று அதிராம்பட்டினம் விஜயம் செய்தார். முன்னதாக தமாகா நிர்வாகிகளை சந்தித்து ஆதரவளித்தமைக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு MMS வாடிக்கு சென்ற அவர் தமாகா நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தார்.
அதன் பின்னர் மமக,தமுமுக அலுவலகம் வந்த அவரை மாவட்ட, மாநில நிர்வாகிகள் வரவேற்றனர்.
அப்பொழுது அதிரை எக்ஸ்பிரஸ் நிருபர் எழுப்பிய கேள்வியான,திமுக தேர்தல் அறிக்கையில் இஸ்லாமியர் நலன் இல்லாதவை குறித்தும், இஸ்லாமிய வேட்பாளர்கள் நிறுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு பலமாக உள்ள நிலையில் எவ்வாறு இஸ்லாமியர்கள் மத்தியில் வாக்கு கேட்க உள்ளீர்கள் என்ற கேள்வியை அடுத்து இது குறித்து பதிலளித்தார்.
இதனை ஒலிப்பதிவு செய்த எமது ஒளிப்பதிவாளரிடமிருந்து வேட்பாளர் கேட்டுகொண்டதின் பேரில் காமிராவை பெற்று படம் அழிக்கப்பட்டன.
மேலும் ஆஃப் த ரெக்கார்ட் என கூறும் அளவிற்கு எந்த பதிலும் அதில் இடம்பெறவில்லை என்ற போதிலும், இது பத்திரிக்கையின் சுதந்திரத்தில் தலையீடு செய்யும் செயலாகும்.