தஞ்சை நாடாளுமன்ற திமுக வேட்பாளர் SS பழனிமாணிக்கம் நேற்று அதிராம்பட்டினம் நகர கூட்டனி கட்சி அலுவலகங்களுக்கு சென்று ஆலோசனை மேற்கொண்டார்.
முன்னதாக அதிராம்பட்டினம் வந்த அவர் நகர தமாக நிர்வாகிகளை சந்தித்து, ஆதரவு அளித்தமைக்கு நன்றி கூறினார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்ட பழனிமாணிக்கம் மமக அலுவலகம் சென்றார் அவரை மாவட்ட, மாநில நிர்வாகிகள் வரவேற்றனர்.
பின்னர் வரவிருக்கும் தேர்தலில் எவ்வாறு களப்பணி ஆற்றுவது? கூட்டனி கட்சிகளின் ஒத்துழைப்பை வேண்டினார்.
ஆனால் பல்லாண்டுகளாக தோழமை கொண்டுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி அலுவலகம் அருகில் இருந்தும் கண்டுகொள்ளாமல் சென்றதை அடுத்து அங்கிருந்த முஸ்லீம் லீக் ஆதரவாளர் ஒருவர் மாவட்ட ஊடக தொடர்பாளரை தொடர்புக்கொண்டு இது குறித்த விளக்கம் கேட்டதாக தெரிகிறது.
அதற்கு வேட்பாளர் வருகை குறித்த தகவல் எதுவும் எங்களுக்கு இல்லை என்றார்.
மேலும் திமுகவின் கோஷ்ட்டி பூசல்களால் ராமநாதபுரம் வேட்பாளரின் வெற்றி கேள்விகுறியாக உள்ள நிலையில் இங்கு முஸ்லீம் லீக்கை புறக்கணித்து வெற்றிக்கனியை சுவைக்க நினைப்பது நியாயமா? என அந்த முஸ்லீம் லீக் பிரமுகர் நம்மிடையே கேள்வி எழுப்பி சென்றார்.