அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் பல்வேறு கட்சிகள் தீவிர ஓட்டு வேட்டையில் இறங்கியுள்ளனர்.
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் திமுக,நாம் தமிழர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள் தங்களின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக களமாடி வருகின்றனர்.
இந்நிலையில் தஞ்சை நாடாளுமன்ற தொகுதி அதிமுக கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ்க்கு ஒதுக்கி இருக்கின்றனர். ஆனால் அக்கட்சியினர் வாக்கு சேகரிப்போ இதர பணிகளையோ அதிரை பகுதியில் இது வரை முன்னெடுக்கவில்லை.
முன்னாள் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் சிறப்பாக பணியாற்றிய சட்ட மன்ற உறுப்பினர் NR ரங்கராஜனின் தம்பி தொகுதியில் போட்டியிட உள்ள நிலையில் பணிகள் மந்த கதியில் நடப்பதாக தொண்டர்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது.
தமாக போராடி பெற்ற ஒரே ஒரு தொகுதியான தஞ்சை தொகுதியின் தேர்தல் பணி இன்னும் ஆரம்பிக்காமல் உள்ளதால் தேர்தலில் வெற்றிவாய்ப்பு எவ்வாறக அமையும்?
என்ற குழப்பமும் தொண்டர்கள் மத்தியில் இல்லாமல் இல்லை !
இது ஒருபுறமிருக்க, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட அதிமுக. கூட்டனி கட்சியின் வெற்றிக்காக இதுவரை களமாடாமல் உள்ளது உண்மையில் தமாக தொண்டர்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தி உள்ளன.