Thursday, March 28, 2024

டிக்-டாக் செயலியை தரவிறக்கம் செய்வதற்கு தடை உத்தரவு!!

Share post:

Date:

- Advertisement -

டிக்-டாக் செயலியை தரவிறக்கம் செய்வதற்கு தடை விதிக்குமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், டிக்-டாக் செயலியை இளைஞர்கள் பலர் தவறான செயலுக்கு பயன்படுத்துவதாகவும், அதனால் சில நேரங்களில் உயிரிழப்புகள் நேரிடுகிறது என்றும் தெரிவித்திருந்தார். இளைஞர்கள் நலன் கருதி டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் நீதிமன்றமே தடைவிதிக்க வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது என்றும், அரசே முன்வந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

டிக்-டாக் செயலியை தரவிறக்கம் செய்வதற்கு தடை விதிக்க மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அந்த செயலியை முழுமையாக தடை செய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...