சென்னை மத்திய தொகுதியில் அமமுக கூட்டனி சார்பில் போட்டியிடும் SDPIகட்சியின் வேட்பாளர் தெஹ்லான் பாகவி போட்டியிடுகிறார்.
அதிகமாக எதிர்கட்சிகளுக்கு டஃப் கொடுத்துவரும் இமாமின் வாக்கு வங்கியை சீர்குலைவு செய்தி கங்கணம் கட்டிக்கொண்டு செயலாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் அதிரையர்கள் அதிகம் வசிக்க கூடிய மண்ணடி பகுதியில் அதிரை மக்களின் வாக்குகளை அறுவடை செய்ய அதிரையில் இருந்து சிறப்பு குழுக்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி மறைந்த முன்னாள் வக்பு வாரிய தலைவர் அஜ. அப்துல் ரஜாக் அவர்களின் இல்லம் சென்று அஜ. அமானுல்லாஹ் அவர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இதேபோல் சீபோல் குழும நிர்வாகிகள், மஜ்பாலாட்ஜ் குடும்பத்தினர் உள்ளிட்ட சென்னையில் புலம் பெயர்ந்து தொழில் செய்து வரும் ஏனைய மக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக பள்ளி கல்லூரிகள் விடுமுறை என்பதால் சொந்த ஊருக்கு செல்லாமல் தேர்தலுக்க்காகவே காத்திருக்கும் பலரை சந்தித்து பரிசு பெட்டகம் சின்னத்தில் வாக்குகளை சேகரித்தனர்.