தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் S.S.பழனிமாணிக்கம் அவர்களை ஆதரித்து நேற்று (12/04/2019) ஒரத்தநாட்டில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நகர திமுக செயலாளர் கிருஷ்ணக்குமார் தலைமையில் நடைபெற்றது.
இதில் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் முன்னிலையில், முன்னாள் திமுக நகர செயலாளர் செல்வராஜ், கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் வசந்தகுமார், மஜகவின் மாவட்ட செயலாளர் பேராவூரணி அப்துல் சலாம் உள்ளிட்டோர் வாக்கு கோரி உரையாற்றினார்.
முன்னதாக ஜும்ஆவிற்கு பின் நடத்த வாக்கு சேகரிப்பில் ஜமாத்தார்கள் முன்னிலையில் பேராவூரணி அப்துல் சலாம் ஆதரவு கோரி பேசினார்.
இந்நிகழ்வில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பஷீர் அகமது, மாவட்ட துணை செயலாளர்கள் ஒரத்தநாடு பாரிஸ் ரஹ்மான், மதுக்கூர் ஜுபைர், மாவட்ட இளைஞரணி செயலாளர் மஹாதீர் முகமது, ஒரத்தநாடு நகர செயலாளர் நூருல் அமின், அதிரை நகர செயலர் அப்துல் சமது, மதுக்கூர் நகர செயலர் அக்பர் அலி, மதுக்கூர் நகர துணை செயலர் சாகுல் ஹமீது மற்றும் கூட்டணி கட்சி பிரமுகர்கள், ஜமாத்தார்கள் திரளாக கலந்து கொண்டனர்.