Home » நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆவடி அருகே 1,381 கிலோ தங்கம் பறிமுதல் !!

நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆவடி அருகே 1,381 கிலோ தங்கம் பறிமுதல் !!

0 comment

நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழக – ஆந்திர எல்லை பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது, அந்த வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை நடத்தியதில் தங்க மூட்டைகள் இருந்தது தெரிய வந்தது.

ஒவ்வொரு மூட்டையும், 25 கிலோவாக இருந்தன. ஓட்டுநரையும், அவருடன் இருந்த மற்றோருவரையும் விசாரித்ததில், திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான தங்கம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

திருப்பதி தேவஸ்தானத்துக்கு கொண்டு செல்லப்பட்ட தங்கம் என்றாலும், உரிய ஆவணங்கள் இல்லாததால், 1381 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் பூந்தமல்லி காவல்நிலையத்தில், வாகனத்துடன் தங்கத்தை ஒப்படைத்தனர். அங்கு, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, இந்தியா முழுவதும் இதுவரை ரூ.2628.43 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை ரூ.514.57 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter