Home » அதிரையில் வெடிகுண்டுடன் விமானம் விழுந்ததாக பரவும் செய்தி உண்மையா ?

அதிரையில் வெடிகுண்டுடன் விமானம் விழுந்ததாக பரவும் செய்தி உண்மையா ?

0 comment

அதிரையில் தமிழக கடலோர காவல்படையின் சார்பில் நேற்று சிறிய ரக விமானம் ஒன்று சோதனை முயற்சியாக பறக்கவிடப்பட்டிருந்தது.

திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம், அதிரை காந்தி நகர் மார்க்கெட்டில் உள்ள மின்கம்பம் மீது விழுந்தது. உடனே அதனை கடலோர காவல்படையினர் மீட்டு கொண்டுச் சென்றனர்.

இந்நிலையில் அந்த சிறிய விமானம் விழுந்த புகைப்படத்துடன் வாட்ஸ்ஆப்பில் ஆடியோ ஒன்றும் அதிரை முழுவதும் பாரஃவி வருகிறது. அந்த ஆடியோவில் பேசும் நபர், விமானத்தில் வெடிகுண்டு உள்ளிட்டவை உள்ளதாக கூறுகிறார்.

அந்த ஆடியோவில் உள்ள தகவல் முற்றிலும் உண்மைதன்மையற்றது. ஆகையால் அதிரை மக்கள், அந்த போலி செய்தியை நம்ப வேண்டாம் என்றும் மேலும் அதனை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் இந்த போலி செய்தியை நம்பி அதிரை மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter