Thursday, March 28, 2024

அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி எதிரொலி… பேரூராட்சி அதிகாரிகள் நடத்திய ஆய்வில் கட்டுக்கட்டாக சிக்கிய பிளாஸ்டிக் பைகள்..!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினத்தில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், கடைகளில் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருவதாக தொடர் புகார்கள் வந்துகொண்டே இருந்தன. இதுதொடர்பாக பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து அதிரை எக்ஸ்பிரஸில் செய்தி வெளியிட்டு வந்தோம்.

இந்நிலையில் இன்று வியாழக்கிழமை அதிரையிள் உள்ள கடைகளில் பேரூராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர். பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் அன்பரசன் தலைமையில் சுகாதார பார்வையாளர் வெங்கடேஷ் மற்றும் பணியாளர்கள் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.

அப்போது கட்டுக்கட்டாக பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. சுமார் 38 கடைகளில் நடைபெற்ற ஆய்வில் 26 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் பிளாஸ்டிக் பயன்படுத்தியதற்காக 4500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

இனி வரும் காலங்களில் அதிரையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரூராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதற்காக சிறப்பு நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...