அதிராம்பட்டினம் ரஹ்மானியா பள்ளிவாசல் அருகே உள்ள மின் கம்பம் கடந்த சில மாதங்களாகவே சாய்ந்த நிலையில் உள்ளன.
இது குறித்து அக்கம் பக்கத்தினர் பல முறை புகார் அளித்தும் இம்மின் கம்பம் சரி செய்யப்படவில்லை. இதனிடையே அந்த மின் கம்பத்தில் அறுந்து விழும் நிலையில் உயர் அழுத்த மின் கம்பி உள்ளதை கவனித்த மக்கள் மீண்டும் மின் வாரியத்தை அனுகியுள்ளனர்.
புகாரின் பேரில் வந்த ஊழியர் இந்த மின் கம்பத்தின் நிலையை கண்டு ஏற மறுத்துவிட்டார்.
எந்நேரமும் விழும் நிலையில் இருக்கும் கம்பம் மற்றும் கம்பியை போர்க்கால அடிப்படையில் மாற்றி இப்பகுதி மக்களின் அச்சத்தை போக்கிட வேண்டும்.
ரமலான் காலம் என்பதால் அப்பகுதில் நடமாட்டம் அதிகமிருக்கும் என்பதாலும், உயிர் பலிக்குமுன் மேற்குறிப்பிட்ட மின் கம்பத்தை அதிகாரிகள் உடனடியாக மாற்றிட நடவடிக்கைகள் தேவை என்கின்றனர் அப்பகுதி மக்கள்.