Home » காந்தி பிறந்த மண்ணில் கோட்சேவுக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் நடத்திய இந்து மகாசபையினர் !!

காந்தி பிறந்த மண்ணில் கோட்சேவுக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் நடத்திய இந்து மகாசபையினர் !!

0 comment

தேசதந்தை மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் பாராமதியில் மே 19ம் தேதி 1910ம் ஆண்டு பிறந்தார்.

சூரத்தின் லிம்பாயத் பகுதியில் சூர்யமுகி ஹனுமான் கோயில் உள்ளது. இங்கு கடந்த 19ம் தேதி கோட்சேவின் பிறந்த நாளை இந்து மகாசபை உறுப்பினர்கள் கொண்டாடினார்கள். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அனுமதி இன்றி கோட்சேவுக்கு பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்ததாக 6 இந்து மகாசபை உறுப்பினர்களை சூரத் போலீசார் கைது செய்தனர்.

இது தொடர்பாக சூரத் போலீஸ் கமிஷ்னர் சதீஷ் சர்மா கூறுகையில், “இந்து மகாசபை உறுப்பினர்கள் கோயிலுக்குள் அனுமதி இன்றி புகுந்து கோட்சேவின் புகைப்படங்களை வைத்து பிறந்த நாள் கொண்டாடியதோடு , இனிப்புகள் பரிமாறியும் பஜனை பாடி உள்ளனர். மேலும் இந்த நிகழ்வை அவர்கள் வீடியோ மற்றும் புகைப்படங்களும் எடுத்துள்ளனர்.

மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவுக்கு பிறந்த நாள் கொண்டாடியது பொதுமக்களின் உணர்வுகளை காயப்படுத்தி உள்ளது. எனவே இந்து மகாசபையினர் மீது பொதுமக்களிடையே சச்சரவை தூண்டுதல் , அமைதியை சீர்குலைத்தல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளோம்” என்றார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter