Home » மணிக்கு ஒருமுறை தடை செய்யப்படும் மின்சாரம் – அதிரையில் அவலம் !

மணிக்கு ஒருமுறை தடை செய்யப்படும் மின்சாரம் – அதிரையில் அவலம் !

0 comment

தமிழகம் முழுவதும் நாளை நோன்புப் பெருநாள் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. அதற்கான தயாரிப்புகளில் முஸ்லீம்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அதிரையிலும் இன்று மாலை முதலே பெருநாள் வேலைகள் களைகட்டத்தொடங்கிவிட்டன. கறி வாங்குவது, சிகை அலங்காரங்கள் செய்வது, புத்தாடை எடுப்பது என ஊரே பரபரப்பாக காணப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க அதிரை மின்வாரியத்தின் நடவடிக்கைகள் முகம் சுளிக்க வைக்கின்றன. ஏனெனில் இன்று காலையிலிருந்தே அதிரையில் அடிக்கடி மின்தடை செய்யப்படுகிறது.

மணிக்கு ஒருமுறை ஏற்படும் மின்தடையால் பெருநாள் கொண்டாட்ட ஏற்பாட்டில் உள்ள அதிரை மக்களும், வியாபாரிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

மேலும் அதிரை மின்வாரியம் உள்நோக்கத்துடன் இந்த மின்தடையை செய்வதாகவும், இந்த மின்தடை நீண்ட காலமாக பெருநாள் சமயங்களில் மட்டும் தோன்றுவதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter