அதிராம்பட்டினம் கடலில் கடந்த சில நாட்களாக கடும் காற்று வீசி வருகிறது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வில்லை.
இந்த நிலையில் அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை கடல் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கரை ஒதுங்கியதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்ததை அடுத்து தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் அச்சடலம் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோத்னைக்காக வைக்கப்பட்டுள்ளது.
கரை ஒதுங்கிய ஆண் சடலம் யார், எந்த ஊரை சார்ந்தவர் என அதிராம்பட்டினம் கடலோர பாதுக்காப்பு படையினர் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்கள். சடலம் கரை ஒதுங்கிய தகவலை அடுத்து மீனவ கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
தகவல் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
அதிராம்பட்டினம் காவல் நிலையம் – 04373242450