Friday, April 19, 2024

பாஜகவினரின் எதிர்ப்பு கோஷங்களுக்கிடையே அல்லாஹ் அக்பர் கூறி எம்பியாக பதவியேற்ற உவைசி !

Share post:

Date:

- Advertisement -

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள், கடந்த இரண்டு தினங்களாக எம்.பிக்களாக பதவிஏற்றனர். அவர்களுக்கு தற்கால சபாநாயகர் வீரேந்திர குமார், எம்.பியாக பதவிப் பிரமானம் செய்துவைத்தார். மாநிலங்களின் பெயர்கள் அடிப்படையில் எம்.பிக்கள் பதவிப் பிரமாணம் எடுத்தனர்.

அதன்படி, தெலங்கானா, தமிழ்நாடு எம்.பிக்கள் நேற்று பதவியேற்றனர். தெலங்கானா மாநிலம் ஹைதரபாத் தொகுதி எம்.பியாக பதவியேற்பதற்கு அசாதுதீன் ஓவைசியின் பெயர் வாசிக்கப்பட்டது. உடனே, பா.ஜ.க எம்.பிக்கள் ஜெய் ஸ்ரீ ராம், வந்தே மாதரம் என்று கோஷம் எழுப்பத் தொடங்கினர். சிரித்த முகத்துடன், தொடர்ந்து கோஷம் எழுப்புங்கள் என்பதுபோல கையை அசைத்துக் கொண்டே வந்த ஓவைசி பதவிப் பிரமாணத்தின் இறுதியில், ’ஜெய் பீம்’, ‘ஜெய் மீம்’ ‘அல்லாஹ் அக்பர்’ என்று கூறினார்.

அவர், பதவிப் பிரமானம் எடுக்கும்போதும், பா.ஜ.க எம்.பிக்கள் ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷம் எழுப்பினர். பா.ஜ.க எம்.பிக்களை சிரித்த முகத்துடன் ஓவைசி எதிர்கொண்டது பலரிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அவர் பதவிப் பிரமாணம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...