அதிரை SSMG நினைவாக 19 ம் ஆண்டு மற்றும் அதிரை இளைஞர்கள் கால்பந்து கழகம் 25 ம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்துத் தொடர் போட்டி அதிரை கடற்கரைத் தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இன்றைய தினம்
கலைவாணர் 7’s கண்டனூர் – உதயம் FC திருச்சி அணிகள் மோதின.
இரு அணிகளும் தங்களது வெற்றியை அடுத்த சுற்றுக்காக அடித்தளம் அமைக்க விரைந்ததால் ஆட்டத்தில் அனல் பறந்தது.
முதல் பகுதி நேர ஆட்டத்தில் கண்டனூர் 2- 1 என்கிற கோல் கணக்கில் முன்னிலை வகித்தாலும், இரண்டாவது பகுதி நேர ஆட்டத்தில் உதயம் FC திருச்சி அணி மீண்டும் ஒரு கோல் அடித்ததும் ரசிகர்களிடையே உற்சாகம் பூண்டது.
இதன் பின்னர் இரு அணிகளும் வெற்றிகான கோலை, கோல் கம்பம் நோக்கி அடித்த அனைத்து முயற்சியும் பயனளிக்கவில்லை.
இறுதியாக 2 – 2 என்கிற கோல் கணக்கில் ஆட்டம் சமநிலையில் முடிந்ததால் வேறொரு தேதியில் ஆட்டம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் விழுப்புரம் – கோட்டைப்பட்டினம் அணிகள் களம் காண உள்ளது.