Home » மல்லிப்பட்டிணம் கிராமசபா கூட்டத்தில் காரசார விவாதம்…!

மல்லிப்பட்டிணம் கிராமசபா கூட்டத்தில் காரசார விவாதம்…!

by admin
0 comment

தமிழகம் முழுவதும் உள்ள 12000க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் கிராம சபா கூட்டம் நடைபெற்றது. மே 1 உழைப்பாளர் தினம் அன்று நடத்தப்பட வேண்டிய கூட்டம் தேர்தல் நடைபெற்றதால் தள்ளிவைக்கப்பட்டு இன்று(28.06.2019) நடைபெற்றது.அதனடிப்படையில் சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் மனோராவில் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மூத்த குடிமகன் என்ற அடிப்படையில் வீரையன் தலைமை தாங்கினார்.கூட்டத்தில் சென்ற கிராம சபா கூட்டத்தில் போடப்பட்ட தீர்மானங்கள் குறித்தும்,ஊராட்சியின் பல பகுதியில் உள்ள சுகாதர சீர்கேடுகளை ஆதாரத்துடன் பொதுமக்கள் காண்பித்தனர்,மேலும் குடிநீர் தொட்டிகளில் புழுக்கள் இருப்பதாகவும் உடனடியாக சுத்தம் செய்திடவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.மல்லிப்பட்டிணத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கிடவும்,தெரு மின் விளக்குகள், குளங்களை தூர் வாரிட வேண்டும்,சாலை வசதிகள்,ஷாபி இமாம் தெரு,வடக்கு தெரு,பேருந்து நிலையம் செல்ல பெண்கள் பயன்படுத்தும் பழைய பேங்க் சாலை போன்றவற்றில் ஏற்பட்ட சுகாதர சீர்கேடுகள் குறித்தும் காரசார விவாதம் நடைபெற்றது. துறைரீதியாக மனுக்களை அனுப்புவதாக PDO கிருஷ்ணமூர்த்தி உறுதியளித்தார்.

 

இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளி சங்கம்,காங்கிரஸ்,SDPI கட்சி,சமுதாய நலமன்றத்தின் பிரதிநிதிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்தூகொண்டனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter