அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் சுற்றுச்சூழலை காக்கும் வகையில் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் கடற்கரைத்தெரு முஹல்லா ஜமாத் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா ஜமாத் தலைவர் அப்துல் ரஜாக் தலைமையில் இன்று காலை நடைபெற்றது.
இதில் கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி முன்புறமும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு முகப்பிலும் பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடப்பட்டன.
இந்நிகழ்வில் பேரூராட்சி செயல் அலுவலர் ரமேஷ், சுகாதார ஆய்வாளர் அன்பரசன், கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி முஹல்லா ஜமாத் நிர்வாகிகள், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முதல்வர் ஆகியோர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.