Home » அதிரை SSMG தொடர் : இறுதிபோட்டிக்கு முன்னேறியது கண்டனூர் !

அதிரை SSMG தொடர் : இறுதிபோட்டிக்கு முன்னேறியது கண்டனூர் !

0 comment

அதிரை SSMG நினைவாக 19ம் ஆண்டு மற்றும் இளைஞர் கால்பந்து கழகம் 25ம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி அதிரை கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் கலைவாணர் 7s கண்டனூர் அணியும் தென்னரசு பள்ளத்தூர் அணியும் மோதினர்.

ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் கோல் அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அது பலனளிக்கவில்லை.

இந்நிலையில் முதல் பாதியின் இறுதியில் கண்டனூர் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் வில்லியம்ஸ், ஃப்ரீ கிக் வாய்ப்பை கோலாக மாற்றினார்.

பின்னர் நடைபெற்ற இரண்டாவது பாதியில் கண்டனூர் அணி மேலும் 2 கோல் அடித்தது. பதிலுக்கு பள்ளத்தூர் அணி முயற்சித்த அனைத்து வாய்ப்புகளையும் கண்டனூர் அணி கோல் கீப்பர் மணி அருமையாக தடுத்தார்.

இறுதியில் கலைவாணர் 7s கண்டனூர் அணி 3-0 என்ற கோல் கணக்கில் தென்னரசு பள்ளத்தூர் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

நாளைய(03/07/2019) தினம் காலிறுதி ஆட்டம் விளையாட இருக்கின்ற அணிகள் :

கெளதியா ஸ்போர்ட்ஸ் கிளப் நாகூர் vs SSMG அதிராம்பட்டினம்

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter