Home » அதிரை SSMG தொடர் : அரையிறுதிக்கு முன்னேறியது நாகூர் !

அதிரை SSMG தொடர் : அரையிறுதிக்கு முன்னேறியது நாகூர் !

0 comment

அதிரை SSMG நினைவாக 19ம் ஆண்டு மற்றும் இளைஞர் கால்பந்து கழகம் 25ம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி அதிரை கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் கெளதியா ஸ்போர்ட்ஸ் கிளப் நாகூர் அணியினரும் SSMG அதிராம்பட்டினம் அணியினரும் மோதினர்.

ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நாகூர் அணி முதல் பாதியில் 2 கோல் அடித்து முன்னிலையில் ஆடியது.

பின்னர் சுதாரித்து அதிரடியில் இறங்கிய SSMG அதிரை அணியினர் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அடுத்தடுத்து 2 கோல் அடித்து உள்ளூர் ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். ஆட்டநேர முடிவில் இரு அணியும் 2-2 என சமநிலை வகித்ததால் ட்ரைபிரேக்கர் முறையில் வெற்றி தோல்வி நிர்ணயம் செய்யப்பட்டது.

இதையடுத்து நடைபெற்ற ட்ரைபிரேக்கரில் நாகூர் அணி 4-3 என்ற கோல் கணக்கில் SSMG அதிராம்பட்டினம் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

முன்னதாக இன்றைய ஆட்டத்திற்கு சிறப்பு விருந்தினர்களாக திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட அமைப்பாளர் பழஞ்சூர் செல்வம், மற்றும் முன்னாள் பேரூராட்சிமன்ற உறுப்பினர் முஹம்மது சரீஃப் ஆகியோர் பங்கேற்று வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து ஆட்டத்தை துவக்கி வைத்தனர்.

நாளைய(04/07/2019) தினம் அரையிறுதி ஆட்டம் விளையாட இருக்கின்ற அணிகள் :

யுனைடெட் ஸ்போர்ட்ஸ் விழுப்புரம் – கெளதியா ஸ்போர்ட்ஸ் கிளப் நாகூர்

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter