Home » மல்லிப்பட்டிணத்தில் மின்ஊழியரை நியமிக்க சமூக ஆர்வலர் கோரிக்கை…!

மல்லிப்பட்டிணத்தில் மின்ஊழியரை நியமிக்க சமூக ஆர்வலர் கோரிக்கை…!

by admin
0 comment

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் நிரந்தர மின் ஊழியரை நியமிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் யாகூப் கோரிக்கை விடுத்துள்ளார்.

மல்லிப்பட்டிணம் பகுதியில் தொடர்ந்து மின் கம்பிகள் அறுந்து விழுவதும்,ஃபீஸ் போவதுமாக வாடிக்கையாகிவிட்டது.இரவு நேரங்களிலும் இது போன்ற நிகழ்வுகள் நடந்த வண்ணமே இருக்கிறது.

மின்பழுதுகளை சரிசெய்ய வெளியூரில் இருந்தே மின் ஊழியர்கள் வரவேண்டிய சூழல் உள்ளது,மேலும் இரவு நேரங்களில் ஏற்படும் பழுதுகள் சரிசெய்யப்படாமல், காலையில் தான் சரிசெய்கின்றனர்.இதனால் பொதுமக்கள்,பள்ளி படிக்கும் மாணவ,மாணவிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.

ஆகவே உடனடியாக மல்லிப்பட்டிணம் பகுதிக்கு நிரந்தர மின் ஊழியரை(லைன் மேன்) நியமித்திட வேண்டும் என்பது சமூக ஆர்வலர் யாகூப் அவரிகளின் கோரிக்கையாக இருக்கிறது. செவிசாய்க்குமா மின்சார வாரியம்

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter