Home » அதிரையில் +1 மற்றும்+2 மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா !

அதிரையில் +1 மற்றும்+2 மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா !

0 comment

அதிரை அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பயிலும் பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவ மாணவியரின் படிப்பிற்காக அரசால் விலையில்லா மடிக்கணினி வழங்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில்
இவ்வாண்டு +1 மற்றும் +2 மாணக்கர்களுக்கு கணினி துரிதமாக வழங்கிட மாணவர்கள்
அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் நடவடிக்கை மேற்கொண்ட அரசு தமிழகத்தில்
உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உயர் நிலை வகுப்புகளில் பயிலும் மாணாக்கர்களை கணக்கெடுத்து, அவர்களுக்கு மடிக்கணினி வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டன. அதன் பேரில் தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ மாணவியருக்கு கடந்த சில நாட்களாக மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி அதிராம்பட்டினம் காதிர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் +1,+2 மாணவர்களுக்கு லெனோவா நிறுவனத்தின் மடிக்கணினி வழங்கப்பட்டன. அதனை
பெற்றுக்கொண்ட மாணவர்கள் உற்சாகம்
பொங்க தங்களின் வீடுகளுக்கு கொண்டு சென்றனர்.

கடந்த ஆண்டு 12ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவர்களுக்கும் 3 மாதம் கழித்து மடிக்கணினிகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter