Thursday, March 28, 2024

வெளிநாடுவாழ் அதிரையர்களுக்கு அவசர கோரிக்கை !!

Share post:

Date:

- Advertisement -

காரைக்குடி-மயிலாடுதுறை வழியாக சென்னைக்கு ரயில்களை இயக்க கடந்த 15 வருடங்களாக பல்வேறு முயற்சிகளை அதிரை அகமது அலி ஜாபர் எடுத்து வருகிறார். குறிப்பாக இந்த வழித்தடத்தில் அகல ரயில் பாதை அமைக்கும் பணியை விரைவாக முடிக்க வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதனை தொடர்ந்து தற்போது இந்த வழித்தடத்தில் லோக்கல் ரயில் சோதனை அடிப்படையில் இயக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, காரைக்குடி-மயிலாடுதுறை வழியாக சென்னைக்கு வரும் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக ரயில்களை இயக்க வேண்டும் என மத்திய அரசுக்கு அதிரை அகமது அலி ஜாபர் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், மக்களவை தேர்தலையொட்டி நன்னடத்தை விதிகள் அமலில் இருந்தபோது காரைக்குடி-மயிலாடுதுறை வழியாக சென்னைக்கு ரயில்களை இயக்க கடந்த மே 7ம் தேதியே தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியதாக சுட்டிக் காட்டினார். இதனால் ரம்ஜான் பண்டிகைக்கு முன்னதாக இந்த வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படும் என எதிர்பார்த்ததாகவும், இருப்பினும் அவ்வாறு நிகழவில்லை என்றார்.

எனவே காரைக்குடி-மயிலாடுதுறை வழியாக சென்னைக்கு வரும் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக ரயில்களை இயக்க வேண்டும் என பிரதமர், ரயில்வே துறை அமைச்சர், தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆகியோருக்கு மின்னஞ்சல் மூலம் வெளிநாடு வாழ் அதிரையர்கள் வலியுறுத்த வேண்டும் என அதிரை அகமது அலி ஜாபர் கோரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...