SDPI கட்சியின் மல்லிப்பட்டிணம் நகரச் செயற்குழு கூட்டம் இன்று(25.7.2019) மாலை 4 மணியளவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மல்லிப்பட்டிணம் நகரச் செயலாளர் ஜவாஹீர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தஞ்சை தெற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மதுக்கூர் ரஹீஸ் வந்திருந்தார்.
கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும்,நகரத்தில் செய்யக்கூடிய அடுத்தடுத்த செயல்பாடுகள்,களப்பணிகள்,திட்டங்கள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதில் செயல்வீரர்கள் தங்களின் கருத்துக்களை பதிவு செய்தனர்.இறுதியாக மல்லிப்பட்டிணம் நகரத் துணைத்தலைவர் ரஃபீக் நன்றியுரை கூறினார்.