அதிரை WFC சார்பில் 9ம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி அதிரை மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பாலு & கனகராஜ் மெமோரியல் திருச்சி அணியினரும் உதயம் FC புதுக்கோட்டை அணியினரும் மோதினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பாலு & கனகராஜ் மெமோரியல் திருச்சி அணி 3- 0 என்ற கோல் கணக்கில் உதயம் FC புதுக்கோட்டை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
நாளையதினம்(27/07/2019) விளையாட இருக்கின்ற அணிகள் :
வெஸ்டர்ன் ஃபுட்பால் கிளப் அதிராம்பட்டினம் – விவேகானந்தா 7s பட்டுக்கோட்டை