Friday, March 29, 2024

நான்கு முறை மாறிய பெயரின் ஸ்பெல்லிங் – இம்முறையாவது பதவி நிலைக்குமா?

Share post:

Date:

- Advertisement -

 

கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்த நிலையில், அதிக இடங்களை வைத்துள்ள கட்சி என்ற அடிப்படையில் பாஜக ஆட்சியமைக்க உரிமை கோரியது. ஆளுநரின் அழைப்பின் பேரில் எடியூரப்பா நேற்று மாலை 4-வது முறையாக முதல்வராக பதவியேற்றார்.

கடந்த மூன்று முறையுமே அவர் முழுமையாக 5 ஆண்டுகள் பதவி வகித்தது கிடையாது. பி.எஸ் எடியூரப்பாவின் முழுப்பெயர் புக்கனகெரெ சித்தலிங்கப்பா எடியூரப்பா. ஆன்மீகம், சோதிடம், வாஸ்து, ராசிக்கல், நியூமராலஜி ஆகியவற்றில் அதீத நம்பிக்கை கொண்ட எடியூரப்பா, தற்போது நான்காவது முறையாக தனது பெயரின் ஆங்கில ஸ்பெல்லிங்கை மாற்றியுள்ளார்.

1980-களில் அவரின் பெயர் Yadiyoorappa என இருந்தது. 1990-களில் Yediyurappa என ஸ்பெல்லிங்கை மாற்றினார். பின்னர், 2000-ம் ஆண்டில் நியூமராலஜி படி Yeddyurappa என ஸ்பெல்லிங்கை மாற்றினார். பின்னர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் Yediyurappa என மாற்றிய அவர், தற்போது மீண்டும் Yediyurappa என்ற பெயருக்கே திரும்பியுள்ளார்.

மேலும், தனது பச்சை துண்டு சென்டிமெண்டையும் எடியூரப்பா பதவியேற்கும் போது விடவில்லை. கடந்த முறை 3 நாட்கள் முதல்வராக இருந்தபோதும் பச்சைத்துண்டு அணிந்தே பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...