Home » அதிரை இந்தியகம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் கோட்டூரார் என்.கமாலுதீன் நினைவாக கல்வெட்டு திறப்பு விழா நடைபெற்றது!!

அதிரை இந்தியகம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் கோட்டூரார் என்.கமாலுதீன் நினைவாக கல்வெட்டு திறப்பு விழா நடைபெற்றது!!

0 comment

அதிராம்பட்டினம்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் கோட்டூரார் என்.கமாலுதீன் நினைவு கொடியேற்றம், கல்வெட்டு திறப்பு விழா அதிராம்பட்டினம் ECR சாலையில் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் என்.காளிதாஸ் தலைமை வகித்தார். விழாவில், அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சி.மகேந்திரன் கலந்துகொண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியை ஏற்றி வைத்து கல்வெட்டை திறந்து வைத்துப் பேசினார்

இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் மு.அ பாரதி, ஒன்றியச் செயலாளர்ஏ.எம் மார்க்ஸ், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சி.பக்கரி சாமி, ஏ.ஐ.ஓய், எப் ஒன்றியச் செயலாளர் கே.ஹாஜா முகைதீன், அதிரை பேரூர் துணைச்செயலாளர் எம்.எல்.ஏ ஹசன், ஏ.எச் பசீர் அகமது, எம். முகமது இக்பால் ,எஸ் பன்னீர்செல்வம் துணை அதிரைசெயலாளர்,க. பிச்சைமுத்து நிர்வாக குழு உறுப்பினர்,
மற்றும்  ஆர்.சுரேஷ்
எஸ். பஞ்சவர்ணம் உள்ளிட்ட அக்கட்சியினர் திரளாக கலந்துகொண்டனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter