Thursday, April 18, 2024

வேலூர் தொகுதி தேர்தல் – எம்பி வைத்திலிங்கம் தலைமையில் களப்பணியாற்றும் அதிரை அதிமுகவினர் !

Share post:

Date:

- Advertisement -

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார் எழுந்ததன் காரணமாக வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தற்போது அங்கு ஆகஸ்ட் 5ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதனால் தமிழக அரசியல் கட்சிகள் வேலூரில் முகாமிட்டுள்ளன. அதிமுக சார்பில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அதிமுக முன்னணி தலைவர்கள், அமைச்சர்கள் என பலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் வேலூரில் ஏ.சி. சண்முகத்திற்கு ஆதரவாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைத்திலிங்கம் தலைமையில் அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகளும் தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.

மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் தலைமையில் பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் பி. சுப்ரமணியம், அதிராம்பட்டினம் நகர செயலாளர் பிச்சை, அதிராம்பட்டினம் நகர துணை செயலாளர் முஹம்மது தமீம், லியாக்கத் அலி, சம்சுதீன், சம்சுல் ஹக், சலாம் உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

மேலும் திமுகவில் இருந்து விலகிய இளைஞர்கள் சிலர் எம்பி வைத்திலிங்கம் முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...

மரண அறிவிப்பு : ஹாஜிமா சிராஜ் ஃபாத்திமா அவர்கள்.!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் M.மஹ்மூது அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும்,...