57
அதிரை WFC சார்பில் 9ம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி அதிரை மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் கடந்த 19/07/2019 வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இதில் இன்றைய தினம் நடைபெற்ற ஆட்டத்தில் கோட்டையூர் அணியினரும் கோட்டைபட்டினம் அணியினரும் மோதினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் பகுதி நேர ஆட்டத்தில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் ஆடி முடித்தனர். பின்னர் நடைபெற்ற இரண்டாம் பகுதி நேர ஆட்டத்தில் கோட்டைப்பட்டினம் அணி மேற்கொண்டு ஒரு கோல் அடித்து 2-1 என்ற கோல் கணக்கில் கோட்டையூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
நாளையதினம்(07/08/2019) விளையாட இருக்கின்ற அணிகள் :
TMMK ஸ்போர்ட்ஸ் அகாடமி – செந்தில் அகாடமி சேலம்