Tuesday, March 10, 2026

திருவள்ளூர் அருகே ஆழ்துளை கிணற்றை காணவில்லையென கிராம மக்கள் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர் .

spot_imgspot_imgspot_imgspot_img

 

திருவள்ளூர் மாவட்டம்
கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள நத்தம் ஊராட்சியில் வசிக்கும் மக்களுக்கு முறையாக குடிநீர் வழங்க மூன்று இடங்களில் ஆழ்துளை கிணறு பலலட்சம் செலவில் போடப்பட்டது .

அதில் 2இடங்களில் போர்வெல் அமைக்கும் பணி பெயிலியர் ஆனதாக கூறியும் போடப்பட்ட ஆழ்துளை குழாய்கள் பைப்புகள் மின்மோட்டார்கள் அப்புறப்படுத்தப்பட்டு ஆபத்தான நிலையில் சிறுவர்களின் உயிருக்கு உலை வைக்கும் விதமாக வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அரசு, மக்கள் வரிப்பணத்தில் போட்ட ஆழ்துளை கிணற்றை காணோம் என ஆரம்பாக்கம் காவல்நிலையத்தில் குடிநீரின்றி அல்லல் படும் நத்தம் கிராம மக்கள் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளனர்.

மேலும் சிறுவர்கள் சிக்கும் விதத்தில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள ஆழ்துளை கிணறு தோண்டிய பள்ளத்தை முறையாக மூடவும் குடிநீர் வழங்கவும் கிராம பொது மக்கள் கேட்டுகொண்டனர்.

தவறும் பட்சத்தில் மறியலில் ஈடுபடபோவதாக தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம்...

அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல்...

மரண அறிவிப்பு-முட்டைக்கடை ஜெஹபர் அலி.

மேலத்தெருவை சேர்ந்த முட்டைக்கடை கபீர் அவர்களின் மகனும்,மர்ஹும் தம்பி சுல்தான் அவர்களின் மருமகனும், கமாலுதீன்,சேகப்துல் காதர்,சாகுல் ஹமீது இவர்களின் சகோதரரும், அகமது அஜாரின்...
spot_imgspot_imgspot_imgspot_img