தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் துறைமுகத்தின் ஒரு பகுதி உடைந்து விழுந்து விபத்து.
மல்லிப்பட்டிணத்தில் தமிழக அரசு 68 கோடி உலக வங்கி நிதியுதவியுடன் கட்டி முடிக்கப்பட்ட மீன்பிடி துறைமுகம் தமிழக முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார்.
இந்நிலையில் இன்று(13.8.2019) துறைமுகத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது, இதனால் எந்தவித பாதிப்பும் யாருக்கும் ஏற்படவில்லை.இதுகுறித்து தமிழ்நாடு மீனவ பேரவை பொதுச் செயலாளர் AK.தாஜுதீன் கூறுகையில், இந்த துறைமுகம் கட்டுமானப்பணியின் போதே தரம் குறித்து மீனவ சங்கத்தின் சார்பில் கேள்வி எழுப்பினோம், அதற்கு பதிலளிக்காமல் அப்படியே கட்டியுள்ளனர்.தரமற்று கட்டியதால் இடிந்து விழுந்துள்ளது.ஆகவே உடனடியாக இதற்கு பொறுப்பு யாரென்று தெளிவுபடுத்த வேண்டும் மேலும் இதுமாதிரி மீண்டும் ஏற்படா வண்ணம் தடுத்திட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.