Saturday, April 20, 2024

அதிரை கடற்கரைத்தெருவில் நடைபெற்ற மாபெரும் இரத்ததான முகாம் !(படங்கள்)

Share post:

Date:

- Advertisement -

நாட்டின் 73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தினர், ஜமாத்தார்கள் மற்றும் முஹல்லாவாசிகள் இணைந்து நடத்திய மாபெரும் ரத்ததான முகாம் இன்று சனிக்கிழமை கடற்கரைத்தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.

சிறப்பாக நடைபெற்ற இம்முகாமில் 90க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு ரத்ததானம் செய்தனர். இதில் பாதிக்கும் மேற்பட்டோர் முதன்முறையாக ரத்ததானம் செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ரத்ததானம் செய்த அனைவருக்கும் அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

அதனைத்தொடர்ந்து சென்ற கல்வி ஆண்டில் 10,11,12 ஆகிய வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் மார்க்க கல்வி முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் கடற்கரைத்தெரு முஹல்லா ஜமாஅத்தினர், தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தினர், இளைஞர்கள் மற்றும் முஹல்லாவாசிகள் பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...