Friday, April 19, 2024

காணமல் போன மீனவர்களின் உடல் கரை ஒதுங்கியது!!

Share post:

Date:

- Advertisement -
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்த 11 மீனவர்கள் கடந்த (02-08-2019) வெள்ளிக்கிழமை புதிய படகு வாங்குவதற்காக பேருந்து மூலம் கடலூருக்குச் சென்றனர்.

பின்னர் அங்கு போட்டியா எனப்படும் புதிய ரக பைபர் நாட்டுப்படகை வாங்கிய மறுநாளே புதிய படகின் மூலம் கடல் வழியாக ராமேஸ்வரம் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே நடுக்கடலில் வந்துகொண்டிருக்கும்போது பகல் 12 மணியளவில் திடீரென படகு கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த 11 மீனவர்களும் கடலுக்குள் விழுந்து உயிருக்குப் போராடினர். செந்தில்குமார், காளிதாஸ் என்ற இரண்டு மீனவர்களும் பிளாஸ்டிக் கேனை பிடித்துக்கொண்டு நடுக்கடலில் மிதந்தனர். மற்ற மீனவர்களின் நிலை என்னவென்று தெரியாத நிலையில் தற்போது அவர்களின் உடல்களும் இன்று கரை ஒதுங்கியுள்ளது.

இதனையடுத்து தமுமுக ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் தஞ்சை தமுமுக தெற்கு மாவட்ட தொன்டரணி செயலாளர் அதிரை கனியுடன் தமுமுகவினர்  மற்றும் கடலோர காவல் படையினரும் விரைந்து சென்று உடலை மீட்டு  பிரேத பரிசோதனைக்கு பின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

 தகவல் : தமுமுக ஊடகப்பிரிவு தஞ்சை தெற்கு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...