216
தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டனர். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினைப் பார்த்ததும் சிரித்துள்ளார். பிறகு இருவரும் கைகுலுக்கிக் கொண்டனர். அடுத்து, அமைச்சர் ஒருவர், ஸ்டாலினை அணைத்தப்படி கைகுலுக்கியுள்ளார். இதையெல்லாம் பார்க்கும்பொழுது தமிழகத்தில் அரசியல் நாகரிகம் சிறப்பாக இருக்கிறது என்றே எண்ணத் தோன்றுகிறது.