அதிமுக பேனர் விழுத்ததால் பெண் ஒருவர் பலி.
சென்னை பள்ளிக்கரணை பகுதியில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயபால் தமது மகன் திருமணத்துக்காக பேனர்களை சாலையில் வைத்திருந்தார். அந்த சாலையில் பல்லாவரத்தைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற 23 வயது இளம்பெண் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
கனடா செல்வதற்காக தேர்வை எழுதிவிட்டு சுபஸ்ரீ வீடு திரும்பிக் கொண்டிருந்த போது சாலையோரத்தில் அதிமுக பேனர் ஒன்று கீழே விழுந்தது. பேனர் விழுந்ததால் சுபஸ்ரீ இருசக்கர வாகனத்துடன் நிலைதடுமாறி கீழே விழுந்தர்.சுபஸ்ரீ பின் வந்த தண்ணீர் லாரியில் கிக்கிக்கொண்டனர்.
படுகாயமடைந்த சுபஸ்ரீயை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.