Saturday, April 20, 2024

கிடு கிடுவென உயர்ந்து கொண்டே போகும் பெட்ரோல், டீசல் விலை… அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள் !

Share post:

Date:

- Advertisement -

இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெயின் சந்தை விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை அவ்வப்போது உயர்த்தி வருகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்களவை பொதுத் தேர்தலின்போது பெட்ரோல், டீசல் விலை குறைந்தது.

அதன்பிறகு கொஞ்சம், கொஞ்சமாக விலை ஏறத் தொடங்கியது. தற்போது சவுதி அரேபிய எண்ணெய் நிறுவனங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் இருந்து இந்தியா, அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வரும் நிலையில், அதன் தாக்கம் எதிரொலிக்கும் என்கிற எதிர்பார்ப்பு நிலவியது.

இந்த நிலையில் இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் விலை கடந்த 6 நாட்களில் ஏறத்தாழ 2 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் பெட்ரோல் விலை இன்று லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் 76.83 ஆக விற்பனையாகிறது. டீசல் விலை 20 காசுகள் உயர்ந்து ரூ.70.76 ஆக விற்பனையாகிறது. கடந்த 6 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.98 காசுகளும் டீசல் விலை ரூ.1.61 காசுகளும் உயர்ந்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...