Home » அடங்க மறுக்கும் டெங்கு ! அதிகாரிகளின் அலட்சியத்தால் உயிர் பழி ஏற்படும் அபாயம் !!! கண்டுகொள்ளுமா மாநில சுகாதாரத்துறை ?

அடங்க மறுக்கும் டெங்கு ! அதிகாரிகளின் அலட்சியத்தால் உயிர் பழி ஏற்படும் அபாயம் !!! கண்டுகொள்ளுமா மாநில சுகாதாரத்துறை ?

0 comment

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தில் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சல் பரவி வந்தன இது சீதோசன நிலையின் காரணமாக இக்காய்ச்சல் பரவலாம் என்ற அடிப்படையில் அருகில் இருக்கும் தனியார் மருத்துவர்களிடம் சிகிச்சை எடுத்துக்கொண்டனர் .

இதில் பெரும்பாலானவர்களுக்கு காய்ச்சலில் தீவிரம் அதிகரிக்கவே அரசு மருத்துவமனையை நாடியுள்ளனர் அப்போது அவர்களுக்கு அங்கு இரத்தம் உள்ளிட்டவை பரிசோதிக்கப்பட்டது
இதில் சிலருக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டன.

இவ்வாறு உறுதி செய்யப்பட்ட பலர் திருச்சி மற்றும் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏழை நடுத்தர வர்க்கத்தினரையும் ஆட்டி படைக்கும் டெங்குவிற்கு அரசு மருத்துவமனையையே நம்பி உள்ளனர்.

இந்நிலையில் பரவலாக டெங்கு நோய் பாதித்தும் மாவட்ட சுகாதார துறை எவ்வித முன்னேற்பாடுகளும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது எனவே மாநில சுகாதார துறை அதிராம்பட்டினத்திற்கு மருத்துவ குழு ஒன்றை அனுப்பி டெங்குவை அகற்றி மக்களின் அச்சத்தை போக்க வேண்டும்.

சுறுசுறுப்பாகுமா சுகாதாரத்துறை ?

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter