Home » சர்வதேச பேரிடர் மீட்பு தினைத்தையொட்டி, தஞ்சை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது..!!

சர்வதேச பேரிடர் மீட்பு தினைத்தையொட்டி, தஞ்சை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது..!!

0 comment

சர்வதேச பேரிடர் மீட்பு தினம் அக்டோபர் 13 அன்று அனுசரிக்கபடுகிறது. அதனையொட்டி தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம், ஆலடிக்குளத்தில் இன்று (13/10/2019) பட்டுக்கோட்டை தீயனைப்பு துறையினர் பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

இதில் புயல் காலத்தில் மக்களை எப்படி காப்பாற்ற வேண்டும். ஆபத்து காலத்தில் இருந்து காப்பாற்றுவது, பேரிடர் காலத்தில் காப்பாற்றுவது போன்ற செயல் முறைகளை தீயணைப்பு துறையினர் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை அவர்கள் முன்னிலை வகித்தார், மேலும் சப் கலெக்டர் , அதிராம்பட்டினம் பேரூராட்சி துறை , தாசில்தார் , RDO , VAO , அதிராம்பட்டினம் காவல் ஆய்வாளர், மற்றும் பேரூராட்சி செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதில் ஏராளமான பொதுமக்களும் காதிர் முஹைதீன் கல்லுரி NCC மாணவர்களும் கலந்துகொண்டனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter