Friday, March 29, 2024

தமிழகத்தில் நாளை ரெட் அலர்ட்… 4 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை !

Share post:

Date:

- Advertisement -

கடந்த 16ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது… இதன் காரணமாக அன்று முதல் இன்று வரை தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரையில் கடந்த 3 நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என நேற்று முன்தினம் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நாளை(22.10.19) மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என 4 மாவட்டங்களை குறிப்பிட்டு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் ரெட் எச்சரிக்கை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால், இந்த குறிப்பிட்ட மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் கவனமாக இருப்பது நல்லது. மற்ற மாவட்டங்களை பொறுத்தவரையில் ரெட் அலெர்ட் எச்சரிக்கை இல்லை என்றும், மிதமான மழை பெய்ய மட்டுமே வாய்ப்பு உள்ளது என்றும், எனவே பொதுமக்கள் பயப்பட தேவை இல்லை என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்து உள்ளார்.

அதி கனமழை என்பதால் நான்கு மாவட்டங்களையும் சிவப்பு நிறத்தால் குறிப்பிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது…இந்த 4 மாவட்டங்களில் 21 சென்டி மீட்டருக்கும் அதிகமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...