Home » அதிரை கடற்கரைத்தெரு முஹல்லா நிர்வாகம் சார்பில் துப்புரவு பணியாளர்களின் சேவையை பாராட்டி போனஸ் !

அதிரை கடற்கரைத்தெரு முஹல்லா நிர்வாகம் சார்பில் துப்புரவு பணியாளர்களின் சேவையை பாராட்டி போனஸ் !

0 comment

அதிராம்பட்டினம் பேரூராட்சி சார்பில் செயல்படுத்தப்படும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் அதிரையில் உள்ள அனைத்து தெருக்களுக்கும் தூய்மைப் பணிக்காக துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவ்வாறு நியமிக்கப்பட்டுள்ள துப்புரவு பணியாளர்கள் தினமும் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள தெருக்களில் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அதிரை கடற்கரைத் தெரு முஹல்லா நிர்வாகம் சார்பில் அங்கு பணியாற்றி வரும் துப்புரவு பணியாளர்களின் சேவையை போற்றும் வகையில் அவர்களை பாராட்டி இன்று வெள்ளிக்கிழமை காலை பரிசுகள் வழங்கப்பட்டது.

கடற்கரைத் தெரு முஹல்லா நிர்வாக கமிட்டி தலைவர் அப்துல் ரஜாக் தலைமையில் செயலாளர் முஹம்மது சித்திக் மற்றும் பொருளாளர் ஹாஜா முகைதீன் ஆகியோர் முஹல்லா சார்பில் துப்புரவு பணியாளர்கள் இருவருக்கு காசோலையும், பரிசும் வழங்கி சிறப்பித்தனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter